மயிலார்

இது, தைமாதத்தில் மதரசங்கிராந்திகழித்த ஏழு அல்லது பதினைந்தாநாட்களில் கன்னிகையர் அழகும், கல்வியும், செல்வமும், ஆயுளுமுள்ள நல்ல கணவன் குமாரக் கடவுளைப்போல் பெறவேண்டிக் கந்தமூர்த்தியை யெண்ணிச் செய்யும் விரதம் என்பர். அன்றி மயிலுருக் கொண்டு அம்மை சிவமூர்த்தியையடைய அநுட்டிந்த நோன்பென்பர். இவ்விரதம் அநுட்டிப்போர் நல்ல புருஷனையும் சம்பத்தினையும் அடைவர்.