எயினந்தையார்

எயின் தந்தை எயினந்தை, எயினனைத் தந்தையாக உடையவரென்பது, அன்றி இவர்பாடலில் ‘’எயின் மன்னன்போல” என்றிருத்தலால் இவ்வருந் தொடர் மொழிபற்றி இப்பெயர் கொடுக்கப் பட்டதோ தெரியவில்லை. இவர் இளங்கீரனாரின் தந்தையாராவர். பாலைத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். தலைவன் மகிழ்ச்சியும் தலைவி துயரமும் தோழி கூறுவதாக இவர்கூறியது ஆராயற்பாலது. இவர்பாடியது நற் 43ம் செய்யுள். (நற்.)