இவர்கள் தமிழ் நாட்டில் தென்னை பனை முதலிய மரங்களிலேறிக் கள்ளிறக்கிக் கள் விற்கும் சாரியார். இவர்கள் (1899) இல் தாங்கள் மற்ற இந்துக்களினும் உயர்ந்தார் என்றும் தங்களை மதுரை திருநெல்வேலி முதலிய தலங்களில் தரிசிக்க விடவேண்டுமென்றும் வாதிட்டுத் தோல்வி பெற்றனர். இவர்கள் ஸ்ரீகள் சில காலத்திற்கு முன் தாழ்ந்த பள்ளர் பரவர் மார் மூடாதிருப்பது போலிருந்தனரென்றும், 1859. இல் ஸர்சார்லஸ் டிரிவிலியன் இவர்கள் மார்மேல் துணி தரிக்கலாமென்று உத்தரவளித்தனர் என்றும் உறப்படுகிறது. இவர்கள் செம்படவர்கள் மாரை மூடுவது போல் உடைதரிக்கலாமேயன்றி உயர்ந்த ஜாதிப்பெண்கள் தரிப்பதுபோல் தரிக்கலாகாதென்று திருவாங்கூர் மகாராஜா கட்டளை, 1858 இல் இவர்கள் தாங்கள் ஷத்ரியர்கள் என்று வெளியிட்டனர். இவர்களிப்பொழுதும் பூணூல் தரிக்கவும் பல்லக்கேறவும் தங்கள் கல்யாணத்தில் பிரயத்தனப்படுகின்றனர். தென்னாட்டாரதற் கிடந்தந்திலர். இவர்கள் தங்களைச் சேரசோழ பாண்டிய வம்சத்தவரென்று கூறிக்கொள்வர். இவர்கள் தாங்கள் ஏற்படுத்திய கலாசாலை களுக்கு ஷத்ரிய பாடசாலையெனப் பெயரிட்டிருக்கின்றனர். இவர்கள் நாங்கள் இந்தப் பூமியையாண்ட ராஜவம்ச சந்ததியார் சாணாரகாசு எங்களால் நிருமிக்கப்பட்ட தென்பர். அதில் தென்னைமரம் போட்டிருப்பதே அதற்குச் சாணியென்பர் அது தவறு, அதில் சிலுவைக்குறி உள்ளதென்பர் சில ஐரோப்பியர். இவர்களின் வம்சத்தைக் கடைசியாகச் சென்ஸஸ் சூபரின் டெண்ட் தீர்மானித்தது, இவர்களுக்குச் சாணார், நாடார், கிராமணிகள் என் பன சாதாரணபட்டம், சாணான் என்னும் பெயர் தமிழ் நூல்களில் எங்கும் காணப்படவில்லை. இராஜ ராஜ சோழன் காலத்து இவர்கள் இழுவர் எனப்பட்டனர் (A. D. 984~1013) 10, 11, ஆவது நூற்றாண்டின் பிங்கலந்தை முதலிய நிகண்டுகளில் கள் விற்போர், பழையர், துவசர், படுவர் என்று கூறியிருக்கிறது, 16 வது நூற்றாண்டின் நிகண்டாகிய சூடாமணியில் சுண்டிகர் என்று மற்றொரு பெயர் சேர்ந்திருக்கிறது. சாணார் சொல்வதாவது, இந்தப் பதம் சான்றார் என்னும் சொல்லின் மருஉ என்பர். அவ்வாறு சாணார் சான்றார் என எப்போதும் அழைக்கப்படவில்லை. எந்தத் தமிழ் நூல்களிலும் காணப்படவில்லை. நாடான், கிராமணியும் நாட்டிலுள்ளவன் எனப்பொருள் படும். அதாவது நகரத்திற்கும் கிராமத்திற்கும் அப்புறத்தில் குடிபிருப்பவன் (South Indian Inscription Vol II Part 1.) இவர்கள் அச்சொற்களுக்குக் கிராமத்தை யாண்டவர்கள் எனப்பொருள் கொள்ளினும் எந்த க்ஷத்ரி யனுமிந்தப் பெயராலாண்டதாகக் காணப்படவில்லை. இவர்கள் கூத்ரியராகப்பெற்றால் தென்னிந்திய சிற்றரசரெல்லாரும் கஷத்ரியராகக்கூடும் (1891) ஸென்ஸஸ் ஸுபிரெண்டெண்ட் கூறுவதாவது சாணார் பள்ளருக்கும் பறையருக்கும் சற்று உயர்ந்தவர்கள் என்பர். இவர்கள் தீண்டாச் சாதியாக எண்ணப்பட்டவர்கள். இவர்களில் பலர் ஷதரியரென்று சாதி அட்டவணையில் உறியிருக்கின்றனர் அது நகைக்கத் தக்கதாம். என்னெனின் திராவிட க்ஷத்ரியர் கிடையாதாதலின். இவர்கள் ஒரு காலத்தும் போர்ச்சேவகம் செய்ததில்லை. சாணான் என்னும் பதம்சாறு என்னும் சொல்லினின்று முண்டாயிற்றாம் பொருள், கள். சில அறிவுள்ள மிசியோனெரிகள் அப்பதம் சாண் நார், நீளத்தில் சாண் அளவுள்ள கயிற்றைத் தளையாக்கொண்டு மரம் ஏறுபவர் என்னும் பொருளது, என்பர். மலபார் நாட்டுக் கள்ளிறக்குவோர், ஒருவருக் கொருவர் தங்களைச் சேணீர் என்று அழைப்பர் இதுசாணார் என்பதின் திரிபு. இவர்களின் ஜாதியைப்பற்றி (1896) இல் காமுடிகோவில் வழக்கிலும் சென்னை ஐகோர்ட் அபீலிலும் இவர்கள் மேற்கூறிய பள்ளர், பறையர் சக்கிலியர்க்குச் சற்று உயர்ந்தவர்கள். இவர்கள் சுத்தமில்லாதவர்கள் இந்துக்களின் கோவில்களில் புக தகாதவர்கள் என்று கூறப்பட்டது. இவர்கள் மரம் ஏறுகையில் உபயோகிக்கும் பொருள்கள் காற்றளை, வடம், பாளைப் பெட்டி, பாளைத்தடி, பாளை அரிவாள், சாணைமண், கள் பெட்டி. இவர்களில் ஐந்து வகைச் சாணார்கள் உண்டு, கருக்குப் பட்டையார், (கருக்குமட்டையார்) கள்ளர், இவர்களும் இச்சாதியைச் சேர்ந்தவராயினும் இவர்களுக்கு ஊழியம் செய்வோர் நாட்டாடி இப்பெயர்கொண்ட ஊரிலுள்ளார் கொடிக்கால் கொடிபிடித்து யுத்தஞ் செய்பவர், மேல்நாட்டார் என்பவர் திருவாங்கூரைச் சேர்ந்தவர்கள், இவர்களில் தொள்ளைக்காதா என்று ஒரு வகுப்பு உண்டு இவர்கள் சாணாருக்குக் கீழானவர்கள், இவர்களில் சிலர் பாண்டியன் என்னும் பட்டம் வகித்திருக்கின்றனர். கோயம்புத்தூரில் சிலர் செட்டிமூப்பன் நாடான் என்னும் பட்டங்கள் வைத்திருக்கின்றனர். தஞ்சாவூர் மான்யல் என்னும் புத்தகத்தில் தென்னையேறுஞ்சாணான், பனையேறுஞ் சாணான், ஈச்சமர மேறுஞ்சாணான் என்று மூன்று பிரிவுகள் கூறப்பட்டிருக்கின்றன. இவர்களுக்கு எனாதிபட்டம். சைவ ஏனாதி நாயனாரால் வந்தது போலும். (தர்ஸ்டன்.)