வலாசுரன் கொல்லப்பட்டபோது அவனெலும்பானது சிதறிப்பலமலைகளிலும் வீழ்ந்துகிடந்து வயிரமணிகளாயின. ததீசியெலும் பென்பாருமுளர். அவ்வயிரம் ஒளிவேறுபாட்டான் நான்காகும். அந்தணன் வெள்ளையரசன் சிவப்பு, வந்தவை வைசியன் பச்சை சூத்திர,னந்தமில்கருமை யென்றறைந்தனர் புலவர் அவை பிரமவயிரம், டித்திரியவியிரம், வைசியவயிரரம், சூத்திரவயிரமென்பனவாம். வயிரத்திற்குக்குற்றம் : சரைமலங்கீற்றுச் சம்படிபிளத்த, றுளைகரிவந்துகாக பாத, மிருத்துக்கோடிக ளிலாதனமுரித, றாரைமழுங்கறன்னோ, டீராறும் வயிரத்திழிபெனமொழிப என்றபடி பன்னிரண்டாம். அவற்றுள் மிக்க குற்றம் நான்கும் பயனுமாவன: க. காகபாதநாகங் கொல்லும். உ. விந்துசிந்தையிற்சந்தாபங்தரும் ந. மலம்பிரியாதது நிலந்தரு கிளைகெடும். ச. கீற்றுவரலினையேற்றவர் மாய்வர் என்பன. குணமாவன: பலகையெட்டுங் கோணமாறு, மிலகிய தாரையுஞ் சுத்தியுந்தராசமு, மைந்துந் குணமென்றறைந்தணர் புலவ, ரிந்திரசா பத்திக லொளிபெறினே என்பன, இந்திரசாபம் ~ வானவில்,. சிவசாத்திரங் களிலே வயிரம் ஒரு வகைக் கல்வென்று கூறப்படும். வயிரம் மதங்கமலை, இமயமலை, வேணாநதி முதலிய விடங்களிற் படுவனவென்பது ஆரிய நூற்றுணிபு. வயிரத்தைச் சரீரத்தி லணிவதனால் கருப்பதோஷத்தினாற் புத்திரோற்பத்தியில்லாத பெண்களுக்குப் புத்திரப்பேறும், யாவர்க்கும் இடி, விஷ முதலியவற்றுக் கச்சமின்மையுமுண்டாம். வலாசுரன் வயிற்றின் புறத்தைக் கொத்தி விழுங்கிய கருடன் அதனைக்கனைத்துமிழ, அதுவீழ்ந்து பல மலைகளிலுமூறிப்பிறந்தகற்கள் மரகத மெனப்படும். கருடோற்காரமெனப்படுவதுமிதுவே. பச்சைக்கு: நெய்த்தமயிற் கழுத்தொத்தபைம் பயிரிற், பசுத்தல் பொன்மைதன்னுடன் பசுத்தல், வக்கி பாய்தல் பொன்வண்டின்வயி, றொத்துத் தெளிதலொடெட்டுங் குணமே கருதுதல் வெள்ளைகன்மணல் கீற்று, பரிவுதார்சாயையிறுகுதன் மரகதத், தெண்ணிய குற்றமிவையென மொழிப. இனி மாணிக்கம். பதுமராகம், சௌகந்தி, குருவிந்தம், கோவாங்கு என நான்கு: தாமரை கழுநீர் சாதகபுட்கண, கோபமின்மினி கொடுங்கதிர் வினக்கு, மாதுளைப்பூவிதை வன்னியீரைந்து, மோதுசாதுரங்க வொளி யாகும்மே, சாதுரங்கமென்பது ~ பதுமராகம், திலகமுலோந்திரம் செம்பருத்திப்பூக், கவிமலர்குன்றி முயலுதிரம்மே, சிந்துரங்குக்கிற் கண்ணென வெட்டும், எண்ணிய குருவிந்த மன்னியநிறமே கோகிலக்கண்செம்பஞ்சு கொய்மலர்ப்பலாச, மசோகப்பல்லவ மணி மலர்க்குவளை யிலவத்தலர் களெனறாறுகுணமுஞ், சௌகந்திக்குச் சாற்றிய நிறனே கோவைசெங்கல் குராமலர் மஞ்சளெனக். கூறியநான்குங் கோவாங்குநிறனே, கோமேதகம் ~ கோமூத்திரநிறமுடையது, இனிப்புருடராத்தினது குணம் பொன்னையுருக்கி மாசறத்தெளிய வைத்தா லொத்த நிறத்தினையுடைமை. வைடூரியம் தேன்றுளி நிறத்தினை யுடையது. நீலம், வெள்ளை சிவப்புப் பச்சை கருமையென, றெண்ணியநாற்குலத்திலங்கிய நிறமே, கோகிலக்கழுத்துக் குவளை சுரும்ப, ராகுலக்கண்கள விரிச்சாறு, காயாலெனக் குணம்பதி னொன்றாமே எனவருவனவற்றாலே தெளியப்படும். நீலத்திற்குக் குற்றமெட்டு. இது காறுங்கூறியமணிகளெல்லாம் ஒரு முதலிற்றோன்றின. இனிமுத்துக் குரியகுற்றம், காற்றேறு, மணலேறு, கல்லேறு, நீர்நிலை யென்பன. குணம் : சந்திரனிறமும், வெள்ளியினது சோதியும், செவ்வாயினது ஒளியுமென மூன்றாம். எல்லாம் உருண்டனவாதல் வேண்டும். பவளத்தினது குணம் : துளையின்மையும், உருட்சியும், சிந்துரநிறமும், முசுமுசுக்கைக்கனி நிறமுமுடைமை. முத்தினாலே மேகோஷ்ணநீங்கும். இரத்தின பரீக்ஷையென்னு நூலிலும் பிற நூல்களிலும் விரிவுகாண்க