விருஷபர்வன்

தானவர்க்கதிபதி. சுக்கிரன் சீஷன். இவன் சகியபனுக்குத் தனுவயிற்றிலே பிறந்தோன். இவன் மகளாகிய சர்மிஷ்டை சுக்கிரன் மகளாகிய சர்மிஷ்டை சுக்கிரன் மகளாகிய தேவயானையை அவமதித்துப் பேசினாள். அஃதுணர்ந்த விருஷபர்வன் அச்சர்மிஷ்டையைத் தேவ யானைக்கு ஏவற்பெண்ணாகுக வென்று சபித்தான். அவ்வாறு அவள் அடிமையாயிருக்கும் காலத்தில் யயாதி தேவயானையை மணம் புரிந்தபோது சர்மிஷ்டையையும் உடன் கொண்டு போய்ப் பின்னர் அவளையும் மனைவியாக்கினான்