வித்தியுற்சிகுவன்

ராவணன் தூதருளொருவன். மகாமயாவி. சீதை அசோக வனத்திலிருந்து ராவணன் சாலங்களுக்குடன் படாதிருந்தமைகண்ட இவன் ராமலக்ஷூமணர்களுடைய தலைகளைக் கொய்துவந்தேனென்று பொய்த்தலைகள் செய்து அவளுக்குக்காட்டி இனியாயினும் ராவணன் எண்ணத்துக்குடன் பாடாயாவென்று கேட்டவன், உ, சூர்ப்பணகைநாயகன். இவன் காலகேயவமிசத்தவன். ராவணன் திக்குவிசயத்துக்குச் சென்றபோது உடன்சென்ற இவனைக் காலகேய யுத்தத்தலே தனதுமைந்துனனென்றறியாது கொன்று மீண்ட போது தன் செயலையுணர்ந்து சூர்ப்பணகையைத் தேற்றி அதற்காக ஜனஸ்தானத்தை நிருமித்து அங்கே அவளை யிருந்தரசு செய்யமாறு செய்தான்