விசிஷ்டாத்துவைதம்

ராமானுஜமதம். அது பிரமமும் வேறு, ஆன்மாவும் வேறு, பிரமத்துக்கு ஆன்மாக்கள் சரீரமாக விருந்து சந்நிதானவிசேஷத்தால் ஞானங் கைகூடப் பெற்றுப் பிரபஞ்சத்தை முற்றத்துறந்து பிரமத்தினது திருவடிமேல் வைத்த பற்றுடையராய் வைகுண்டஞ் சென்று அங்கே சாரூபம் பெற்றா நந்திக் திருத்தலே முத்தியென்று கூறுவது