புணர்ச்சிக்கண் தோன்றல், திரிதல், கெடுதல் – என்ற மூன்றுவிகாரங்கள் அமையும்.எ-டு : நாய் + கால் = நாய் க் கால் – ககரம் தோன்றல்விகாரம். நெல் + கதிர் = நெ ற் கதிர் – லகரம் றகரமாதல் திரிதல். மரம்+ வேர் = மரவேர் – மகரம்கெடுதல் விகாரம். (நன். 154)விகாரம் எனினும், செயல் எனினும், செயற்கை எனினும், விதி எனினும்ஒக்கும்.