மாவிலிங்கம் என்னும் ஒருவகை மரத்தை வாரணம் என்னும் சொல் குறிப்பதால் தாவரத்தால் வாரணம் என்ற ஊர் பெயா் பெற்றதோ என எண்ண இடமளிக்கிறது. (வாரணம் கோழி என்ற உறையூரைக் குறிக்கும் என்பதை “தென்றிசை மருங்ற் செலவு விருப்புற்று, வைகறையாமத்து வாரணங்கழிந்து” (சிலப்.11:10 11) முன்னரே கண்டோம்) வாரணாசி என்றும் வாரணவாசி என்றும் இலக்கியத்தில் கூறப் பெறும் வாரணம் என்னும் இவ்வூர் மத்திம நன்னாட்டைச் சார்ந்தது.
“மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள்”? (சிலப். 15;178)
“வாரணாசி யோர் மறை யோம் பாள
னாரண வுவாத்தி யபஞ்சிகனென் போன்” (மணிமே.13 : 344)
“தீண்டற் காகாத் திருந்துமதிலணிந்த
வாரணவாசி வளந்தந்தோம்பும்” (பெருங், 3:17: 12 13)