வாய்ப்பியர் என்பவரால் இயற்றப்பட்ட பண்டைய இலக்கண நூல். பாக்களின்வருணம் பற்றிய நூற்பாக்கள் நான்கு இந் நூலினின்று மேற்கோளாகயாப்பருங்கல விருத்தியில் காணப்படுகின்றன. மாவாழ் சுரம், புலிவாழ்சுரம் என்ற வாய் பாடுகள் நேர்நேர்நிரை, நிரைநேர்நிரை என்ற சீர்களுக்குரியன; இவை இருப்பவும், இடையே உயிரள பெடை அமைந்த தூஉமணி, கெழூஉமணிஎன்ற வேறிரண்டு வாய்பாடு களையும் வாய்ப்பியனார்குறிப்பிட்டுள்ளார்.சந்தம், தாண்டகம் என்ற விருத்த வகைகளை வாய்ப்பிய நூல்பாவினங்களாகக் குறிப்பிடுகிறது.’சீரினும் தளையினும் சட்டக மரபினும், பேரா மரபின பாட் டெனப்படும்’எனவும், ’அவை திரிபாகின் விசாதி யாகும்’ எனவும் வாய்ப்பியம்குறிப்பிடுகிறது.பண் நால்வகைத்து என்றற்கு வாய்ப்பிய நூற்பா மேற் கோளாகும்.வாகையும் பாடாணும் பொதுவியலும் (புறப்) புறமாகும் என்பதற்குவாய்ப்பிய நூற்பா மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ளது. சொல்லானது பெயர்,தொழில், இடை,உரி என நால்வகைப்படும் என்பதற்கு வாய்ப்பிய நூற்பாக்கள்மேற்கோளாகக் காட்டப்பட்டுள.செந்துறை, வெண்டுறை என்பன இவையிவை என வாய்ப்பிய நூற்பாவால்விளங்கச் சுட்டப்பட்டுள்ளன.இந்நூற்பாக்களை நோக்க, வாய்ப்பியம் என்பது இறந்துபட்ட பண்டையமுத்தமிழிலக்கண நூலோ என்று கருத வேண்டி யுள்ளது. (யா. வி. பக்.219,358, 226, 486, 488, 567, 571, 578, 579.)