வளமடல்

அறனும் பொருளும் வீடும் என்று கூறும் இம்மூன்று பகுதி யின் பயனைஇகழ்ந்து, மங்கையரைச் சேர்தலான் உளதாகிய மெல்லிய காமவின்பத்தினையேபயன் எனக் கொண்டு, தனிச்சொல்லின்றி, இன்னிசைக்கலிவெண்பாவால் தலைவ னதுஇயற்பெயரமைந்த அவ்வெதுகையில் அப்பொருள் முற்றப் பாடும் பிரபந்தம்.இன்பமடல் எனவும் பெறும். (இ. வி. பாட். 96)