வல்லினப்பாடல்

வல்லின மெய்களும் உயிர்மெய்களுமே வந்துள்ள பாடல்.எ-டு : ‘துடித்தடித்துத் தோற்றத் துடுப்பெடுத்த கோடறொடுத்த தொடைக்கடுக்கை பொற்போற் – பொடித்துத்தொடிபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்கடிபடைத்துக் காட்டிற்றுக் காடு’தடித்து – மின்னல்; துடுப்பு – பூக்குலை; கடுக்கை – கொன்றை; துடி -துடித்தல், நடுங்குதல்.“நடுங்குதலையுடைய மின்னல் தோன்றவே, காந்தள் பூக் குலைகளைவெளிப்படுத்தின. தொடுத்த மாலைகள் போலக் கொன்றை பொன் போன்ற பூக்களைமலரச் செய்தன. தொடி அணிந்த தோள்களும் இடப்புறம் துடித்தன. மயில்கள்ஆடக் கானகம் புதிய தளிர்களைத் தோற்றுவித்துக் காட்டு கின்றது.” என்றுகார்காலம் கண்டு தலைவன் வருகை குறித்துத் தலைவி கூறியது. இப்பாடல்.(தண்டி. 97)