கலம்பகம் என்ற பிரபந்தத்தில் குறிப்பிடப்படும். அகத்துறைப்பாடல்களுள் இஃது ஒன்று. தெருவில் மீன் விற்கும் வலையர் குல மகளின்வனப்புமிகுதி தனது உள்ளத்தை வருத்திய செய்தியைக் காமுகன் ஒருவன்எடுத்துக் கூறுவதாக அமையும் அகப்புறக் கைக்கிளைத் துறைப்பாடல்.(மதுரைக் கல. 67)