வடமொழித் தண்டகம்

துண்டம் எனப்படும் சீர்களது தொகுதி நான்கு, எட்டு, பதினாறு,முப்பத்திரண்டு என இரட்டி வரும் முறையால் நான்கடியான் அமைவதுதண்டகமாம். (அத்துண்டங்கள் மிகினும் குறையினும் தண்டகப் போலியாம்.)துண்டம் அடிதோறும் சம அளவிற்றாதல் வேண்டும்; பிழைப்பின் அது போலியாம்என்க. (தென். இயற். 70)