வச்சணந்தி மாலை

தம் ஆசிரியரான வச்சணந்தி முனிவர் பெயரால் குணவீர பண்டிதர் என்றசமணர் வெண்பாயாப்பில் இயற்றிய பாட்டியல் நூல்; வெண்பாப் பாட்டியல்எனவும் பெயர் பெறும். நூல் இயற்றப்பட்ட காலம் 12ஆம் நூற்றாண்டு,முதன்மொழியியல், செய்யுளியல், பொதுவியல் என மூன் றாகப் பாகுபட்டுள்ளஇந்நூலுள் 103 வெண்பாக்கள் உள. இப்பாட்டியற்கண் பத்துப்பொருத்தங்களும், பிரபந்த வகைகளும், பா வருணம் முதலிய பலவும்சொல்லப்பட்டுள. இதன் பண்டையுரையாசிரியர் பெயர் தெரியவில்லை.