யாப்பருங்கலக் காரிகை

யாப்பருங்கல ஆசிரியர் அமிதசாகரர் அவ்யாப்பு நூலுக்கு அங்கமாகயாப்பருங்கலக் காரிகை இயற்றினார். அலங்கார முடைத்தாகச்செய்யப்பட்டமையால் இந்நூல் காரிகை எனப்பட்டது. இந்நூலின் சூத்திரங்கள்கட்டளைக் கலித் துறை யாப்பின.இவ்யாப்பு நூலின்கண் கடவுள் வாழ்த்தும் வருபொரு ளுரைத் தலுமாகியதற்சிறப்புப் பாயிரம் 1, அவையடக்கம் 2, உறுப்பியல் காரிகைகள் 18,செய்யுளியல் காரிகைகள் 16, ஒழிபியல் காரிகைகள் 10 – ஆக 47 காரிகைகள்காணப்படு கின்றன. முதல் மூன்றும் நீக்கப்படின், அவை 44 ஆம்.பல காரிகைகள் மகடூஉ முன்னிலை பெற்று நிகழ்கின்றன. சில காரிகைகள்முதல் நினைப்பு உணர்த்துவனவாக உள. ‘தூங்கேந் தடுக்கல்’ என்ற காரிகைஆசிரியராலே இயற்றப் பட்டது என்பர் சிலர். ஆயின் உரையாசிரியர்குணசாகரர் அக்காரிகையைக் கணக்கிடாமையாலேயே 44 என்ற எண் ணிக்கைகிட்டிற்று. அவர் கருத்துப்படி அக்காரிகையை ஆசிரியர் புனைந்திலாமைதெளிவு.உரையாசிரியராம் குணசாகரர் அமிதசாகரர்தம் மாணாக் கரே என்பதுபெரும்பான்மையோர் கருத்து. உரை இயற்றி யவர் குணசாகரரா அன்றிப்பிறரொருவரா என்பதன்கண் கருத்து வேறுபாடுண்டு. இந்நூலின் காலம் 11ஆம்நூற்றாண் டின் முற்பகுதி என்ப.