மெல்லினப் பாடல்

எ-டு : ‘மானமே நண்ணா மனமென் மனமென்னுமானமான் மன்னா நனிநாணு – மீனமாமானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினுமானா மணிமேனி மான்’மானமான் மன்னா! மானமே நண்ணா மனம் என்மனம் என்னும், நனி நாணும் ஈனம்ஆம், ஆனா மி(ன்)னல் மின்னி முன்னே நண்ணினும், மானா (-ஒப்பில்லாத)மணிமேனி மான் என்று பிரித்துப் பொருள் கொள்க.“பெருமை பொருந்திய யானைகளையுடைய தலைவனே! அமையாத மின்னல் மின்னி நீவிடுத்த தூதாகத் தலைவி முன்னே வந்து காட்சி வழங்கினாலும், அதனால் நீவிரைந்து வருகையைக் குறித்து ஆறுதல் அடையாமல், ‘என் மனம் மானமில்லாதமனம்’ என்றும்,‘என் நாணும் மிகக் குறைகிறது’ என்றும், அழகியமேனியளாகிய தலைவி கூறிக் கொண்டிருந்தாள்” என்று வினைமுற்றி மீண்ட தலைவனிடம் தோழி கூறிய இப்பாடலில், மெல்லின மெய்களும் மெல்லினஉயிர்மெய்களுமே வந்துள்ளன. (தண்டி. 97 உரை)