இன்று திருமயம் எனச் சுட்டப்படும் ஊர் இது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. திருமங்கையாழ்வார் பாடிய திருமால் கோயிலுடன் சிவன் கோயிலும் இங்குள்ளது. மெய்யம் அமர்ந்த பிரான் (நாலா – 1524),’ போன்று பல குறிப்புகள் அமையினும் பெயர்க்காரணம் புலனாகவில்லை. எனினும், ” வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் (நாலா 1760) என இறைவனாகிய மெய்யன் இருப்பதினால் திருமெய்யம் என்று அழைக்கப்பட்டதோ எனத் தோன்றுகிறது.