முத்துவீர உபாத்தியாயரால் இயற்றப்பட்ட ஐந்திலக்கண நூல்; 19ஆம்நூற்றாண்டினது.எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்ததி காரங்களிலும்முறையே எழுத்தியல் மொழியியல் புணரியல் எனவும், பெயரியல் வினையியல்ஒழிபியல் எனவும், அகவொழுக்கவியல் கள ஒழுக்கவியல் கற்பொழுக்கவியல்எனவும், உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் எனவும், சொல் லணியியல்,பொருளணியியல் செய்யுளணியியல் எனவும் அதிகாரம்தோறும் மும்மூன்றுஇயல்கள் உள. அதிகாரம் தோறும் தற்சிறப்புப் பாயிரம் ஒன்று பரம்பொருளைவாழ்த்தி அதிகாரத்தை நுதலிப் புகுகிறது. இவை நீங்கலாக ஒன்பதுஇயல்களிலும் முறையே 114, 44, 297; 135, 48, 125; 59, 24, 9; 38, 61,167; 25, 104, 31 எனும் எண்ணிக்கைப்பட நூற்பாக்கள் நிகழ் கின்றன.“சுப்பிரமணிய தேசிகன் கவிப்பெருமாள் கேட்டுக்கொண்ட தற்கிணங்க,உறந்தையகத் தெழுந்தருளிய முத்துவீரமா முனிவன், அகத்திய நூல்வழியேஇந்நூலைத் தன் பெயர் நிறுவி வகுத்தனன்” என்கின்றதுசிறப்புப்பாயிரம்.திருப்பாற்கடல்நாதன் என்ற பெயரினர் இதன் உரையாசிரியர்.