கலம்பகம் என்ற பிரபந்தத்தில் குறிப்பிடப்பெறும் அகத்துறை களுள்ஒன்று. தலைவன் தோழியிடம் தலைவிக்கு அளிப்ப தற்குக் கையுறையாகக் கொண்டுசென்ற முத்தினைத் தோழி தன் நயமான பேச்சினால் கையுறையாகக் கொள்வதைமறுத்துக் கூறுவதாக இவ்வகத்துறைப் பாடல் அமையும். (திருவரங்கக்.61)