முதுகுன்றம்

தென் ஆர்க்காடு மாவட்டத்தில் விருத்தாசலம் என்ற பெயரில் இது இன்று வழங்கப்படுகிறது. மூவர் பாடலும் பெற்றது இவ்வூர். முதுகுன்றம் முத்தாறு வலம் செய்யும் முதுகுன்று றும் (சுந்- 43-11) முத்தாறு வெதிருதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முதுகுன்றமே என்றும் (திருஞான-131-1) மொய் கொள் மாமணி கொழித்து முத்தாறு சூழ் முதுகுன்றை (சேக் – 34-181) என்றும் மணி முத்தாறு பாயும் இப்பகுதி சிறப்பிக்கப்படுகிறது. மேலும் முல்லை கமழும் முதுகுன்று ((சிவபெரு – திருவிரட் -5) செழுநீர் வயல் முதுகுன்று (நம்பி -திருத்-77) போன்ற பாடலடிகள். முதுகுன்றின் செழுமையை இயம்புவன. என் முதுகுன்று என்று இவ்வூர் பாடப்படினும், இதன் பழம் பெயர் பழமலையாக இருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. இன்றைய பெயர் விருத்தாசலம், பழமலையின் வடமொழி மாற் றமே என்றும், விருத்தாசலமே முதுகுன்றம் என மாற்றப்பட்டது என்றும் அறிஞர் கருதுகின்றனர். இப்பதியில் கோயில் கொண் டுள்ள இறைவன் பெயர் பழமலை நாதர் எனவும் தெரிகிறது. ” பழமலை, பழங்கள் நிறைந்த மலைப்பகுதி என்ற நிலையில் முதலில் பெயர் பெற்றதாகவும், பின்னர் அது விருத்தாசலம் என, பழமை 1. ஊரும் பேரும் – பக். 288 ஊர்ப்பெயர்கள் 239 முதுமை என்ற பொருளில் முதுகுன்றம் என்று வழங்கத் தொடங் கியதாகவும் கூறப்படுகிறது. பிரமன் படைப்புக்கு முன் சிவ பெருமான் தாமே மலை வடிவாகி நிற்கப் பிரமன் அதனையறி யாது, பல மலைகளையும் படைத்து. அவற்றை நிலை பெறுத்த இடமின்றி மயங்கச் சிவபெருமான் தோன்றியருளித் தானே பழ மலையா தலைத் தெளிவித்தார் ஆதலின் முதுகுன்றம் எனவும் பழமலை எனவும் வழங்குவதாயிற்று என்ற எண்ணமும் இவ்வூர் குறித்து உண்டு.