மாவிலங்கை

இலங்கை என்றும்‌ சொல்‌ ஆற்றிடைக்‌ குறை என்றும்‌ பொருள்‌ உடையது. “கடற்கரை ஓரமாக நீரும்‌ நிலமும்‌ ஆக அமைந்த இடம்‌ இலங்கை என்று பெயர்‌ பெறும்‌. ஆறுகள்‌ கடலில்‌ கலக்கற இடத்‌தில்‌ கிளைகளாகப்‌ பிரிந்து இடையிடையே நீறும்‌ திடலுமாக அமைவதுண்டு. இவ்வாறு நீரும்‌ திடலுமாசு அமைந்த இடத்தை லங்கா (இலங்கை) என்று ஆந்திர நாட்டவர்‌ இன்றும்‌ வழங்குவர்‌. நீரும்‌ திடலுமாக அமைந்திருந்த பட்டினநாடு. மாவிலங்கை என்றும்‌ பெயர்‌ பெற்றிருத்தது.(லங்கா அல்லது இலங்கை என்பது பழைய திராவிடமொழிச்‌ சொல்‌ எனத்‌ தோன்றுகிறது) இப்‌போதும்‌ ஓய்மர்‌ நாட்டு மாவிலங்கைப்‌ பகுதியில்‌ ஏரிகளும்‌, ஓடை களும்‌ உப்பளங்களும்‌ காணப் படுகின்‌. றன. ஏரிகளும்‌ ஓடைகளும்‌ ஆகிய நீர்‌ நிலைகளை உடைய இடத்‌தில்‌ அமைந்த ஊர்ப்பகுதி என்ற கருத்தில்‌ இலங்கை எனப்பெயர்‌ பெற்று “மா” என்ற முன்‌ ஒட்டுடன்‌ மாவிலங்கை என ஆகியிருக்க வேண்டும்‌. “இது பழம்‌ பெருமையினையுடைய இலங்கையினது பெயரைப்‌ பெற்றது. மிக்க பெருமையுடையது. நறிய பூக்களை உடைய சுரபுன்னையையும்‌ அகிலையும்‌ சந்தனத்தையும்‌ குளிக்கும்‌ துறையிலே பெற்ற பெரிய நீர்‌ நிலையையுடையது. ஆவியர்‌ பெருமக்கள்‌ மன்னராயிருந்து ஆண்டு வந்தனர்‌. அவருட்‌ கொடையிற்‌ ஏறந்தவன நல்லியக்‌ கோடன்‌ என்று இலக்கியம்‌ கூறுகிறது. திண்டிவனத்துக்கு வடக்கில்‌ ஏறத்தாழ ஒரு கல்‌ தொலைவில்‌ தெள்ளாறு செல்லும்‌ வழியில்‌ மேல்மாவிலங்கை என்னும்‌ சிற்றூர்‌ உள்ளது. இதற்குக்‌ கிழக்கில்‌ மூன்று பார்லாங்கு தொலைவில்‌ கீழ்‌ மாவிலங்கை என்னும்‌ சிற்றூர்‌ உள்ளது. மேல்‌ மாவிலங்கை என்பது ஓரே தெருவையுடைய சிற்றூர்‌. கீழ்‌ மாவிலங்கை என்பது ஐந்து அல்லது ஆறு தெருக்களையுடைய சிற்றூர்‌. இந்த இரு சிற்றூர்களும்‌ சேர்ந்ததே மாவிலங்கை என்னும்‌ ஊர்‌. இது ஓய்மானாட்டு உள்‌ நாட்டு ஊர்‌. கிடங்கிலைக்‌ கோட்டையாகக்‌ கொண்டு இந்த மாவிலங்கை. நல்லியக்‌ கோடனின்‌ தலைநகராக அமைந்திருந்தது போலும்‌,
“நறுவீநாகமும்‌ அகிலும்‌ ஆரமும்‌
ஈதுறை ஆடு மகளிர்க்குத்‌ தோட்புனை ஆகிய
பொருபுனல்‌ தரூஉம்‌ போக்கு அருமரபின்‌.
தொன்மாவிலங்கை……..”.. (பத்துப்‌. சிறுபாண்‌, 117 120)
“ஓரை ஆயத்து ஒண்‌ தொடி மகளிர்‌
கேழல்‌ உழுத இருஞ்சேறு கிளைப்பின்‌
யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்‌
தேன்நாறு ஆம்பல்‌ இழங்கொடு பெறூஉம்‌
(இருமென ஒலிக்கும்‌ புனல்‌அம்புதவின்‌
பெருமாவிலங்கைத்‌ தலைவன்‌, சீறியாழ்‌.
இல்லோர்‌ சொல்மலை. நல்லியக்கோடன்‌…” (புறம்‌. 176;1 3) (இன்றும்‌ கிடங்கில்‌ அடுத்துள்ள கிடங்கல்‌ ஏரியில்‌ நீர்‌ இறைந்து மதகின்‌ வழியே வெளியில்‌ செல்லும்‌ பொது இழும்‌ என்ற. ஓசை முழங்கும்‌ ஒலியைக்‌ கேட்கலாம்‌)
“நெல்‌அரி தொழுவர்‌ கூர்வாள்‌ மழுங்கின்‌
பின்னை மரத்தொடு அரிய, கல்செத்து,
அள்ளல்‌ யாமைக்கூன்‌ புறத்து உறிஞ்சும்‌
நெல்‌ அமல்‌ புரவின்‌ இலங்கைக்‌ கிழவோன்‌
வில்லியாதன்‌ கிணையேம்‌/ பெரும! (௸.379;3 7)
(ஓய்மான்‌ நல்லியக்கோடனைப்‌ போலவே, ஓய்மான்‌ நல்லி யஈதன்‌ (புறம்‌, 376) என்பவனும்‌ ஓய்மான்‌ வில்லியாதன்‌ (புறம்‌. 379) என்பவனும்‌ மாவிலங்கை நகரைக்‌ கொண்ட ஓய்மா நாட்டை அரசாண்டிருக்க வேண்டும்‌)