மாறன் பாப்பாவினம்

பாக்களையும் பாவினங்களையும் நூற்பாக்களால் விளக்கா மல்இலக்கியங்களைக் கூறியே இந்நூல் விரிவாக விளக்கு கிறது. (குமர குருபரர்அருளிய சிதம்பர செய்யுட் கோவை யை இஃது இவ்வகையால் ஒக்கும்எனலாம்.)வெண்பா முதலான நூற்பாக்களும் அவற்றின் பாவினங் களும், மருட்பாவும்,பரிபாடலும் இதன்கண் இலக்கியமாகத் தரப்பட்டுள. நூலுள் 140 பாடல்கள்உள.இந் நூலாசிரியர் 16ஆம் நூற்றாண்டுப் புலவரான திருக்குரு கைப்பெருமாள் கவிராயர் என்ப. பாடல்கள் இன்ன யாப்பின என்று திட்ப நுட்பமுறவிளக்கும் சிறு குறிப்புக்கள் திருப் பேரைக் காரிரத்தினக் கவிராயரால்இயற்றப்பட்டன என்ப.