மாறன் அகப்பொருள்

இந்நூல் 16ஆம் நூற்றாண்டில் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்ததிருக்குருகைப்பெருமாள் கவிராயர் குடும்பத்தில் தோன்றிய சடையன்என்பவரால் இயற்றப்பட்டது. இவரே மாறன் அலங்காரம்,திருக்குருகாமான்மியம் முதலியவற்றை இயற் றியவர். மாறனகப் பொருள்அகத்திணை இயலும் ஒழிபிய லும் விரிவாக உள்ளன. அவை தொல்காப்பியத்தையும்நச்சினார்க்கினியர் உரையையும் உட்கொண்டு அகப் பொருட்குச் சிறந்தவிளக்கமாக அமைந்தவை. இக்காலத்துக் கிட்டும் களவியல் வரைவியல்கற்பியல்களில் நம்பியகப் பொருளில் கூறப்படாத 30 துறைகள்காணப்படுகின்றன. களவு வெளிப்படற்குரிய கிளவித்தொகைகளில் வரைந்து கோடல்என்ற கிளவியை அமைத்து ஒன்பது துறைகளில் விளக்கியுள்ள இந்நூலில்காணப்படும் சிறப்புச் செய்தியாம். இதற்கு இலக்கியமான 527 பாடல்கள்கொண்ட திருப்பதிக் கோவை அமைந்துள்ளது. அண்மையில் நூல் முழுவதும்உரையுடன் வெளிவந்து உள்ளது. புதுவை ஃபிரஞ்சு ஆராய்ச்சிப் பள்ளியின்பதிப்பு அது.