மாங்காடு என்பது குடகுமலைப் பக்கத்து ஓர் ஊர், சூரர மகளிர் உறைகின்ற ஒரு காடு மாங்காடு என்னும் பெயருடன் இருந்ததாகவும் தெரிகிறது. மாங்காடு என்னும் பெயருடன் சென்னைக் கருகில் ஓர் அம்மன் தலம் உள்ளது.
“நனி நோய் எய்க்கும் பனிகூ ரடுக்கத்து
மகளிர் மாங்காட் டற்றே” (அகம். 288:14 15)
“வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்” (சிலப். 11:53)