மயேந்திரப்பள்ளி

இன்று கோயிலடிப்பாளையம் என்று வழங்கப்பட்டுவரும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. மயேந்திரன் என்ற இந்திரன் வழிபட்டதால் இப்பெயர் பெற்றது என்பர்,
திரை தரு பவளமும் சீர்திகழ் வயிரமும்
கரை தரு அகிலொடு கனவளை புகுதரும்
வரை விலா வெயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை யழகனை யடியிணை பணிமினே -289.1
கொண்டல் சேர் கோபுரம் கோலமார் மாளிகை
கண்டலும் கைதையும் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
செண்டு சேர் விடையினான் திருந்தடிபணிமினே-289-2
என இத்தலம் பற்றிப் பாடுகிறார் ஞானசம்பந்தர்.