பெரியவாச்சான் பிள்ளை

13ஆம் நூற்றாண்டினராகிய வைணவ ஆசாரியார்; திருப் பனந்தாளை யடுத்தசேய்ஞலூரில் தோன்றியவர்; ஸ்மார்த்தச் சோழியர்; பின் வைணவர் ஆகியவர்;திவ்ய பிரபந்தம் முழுமைக்கும் வியாக்யானம் வரைந்துள்ளார்.பெரியாழ்வார் திருமொழியின் பெரும்பகுதிக்கு இவர் வரைந்த வியாக்யானம்கிட்டவில்லை. திருவாய்மொழிக்கு இவர் வரைந்த இருபத்து நாலாயிரப்படிமிகச் சிறந்தது என்ப. நம்பிள்ளையினது ஈடு இதனைப் பெரும்பாலும்விளக்குவதாக அமைந்துள்ளது.