பெயர் நேரிசை

பாட்டுடைத்தலைவன் பெயரையும் ஊரையும் சார்ந்து வருமாறு தொண்ணூறும்எழுபதும் ஐம்பதும் நேரிசை வெண்பாவால் கவிகள் பாடின், அவை பெயர்நேரிசைஎனவும் ஊர்நேரிசை எனவும் வழங்கப்படும். ஈண்டுப் பாட்டுடைத் தலைவனதுபெயரைச் சார்ந்துவரப் பாடப் படும் 90, 70, 50 ஆகிய நேரிசைவெண்பாவாலமைந்த பிரபந்தம். (இ. வி. பாட். 70)