பிரபந்தம்

தொடர்நிலைச் செய்யுளாகிய பிள்ளைத்தமிழ் கலம்பகம் பன்மணிமாலைமும்மணிக்கோவை முதலாயினவும், தனி நிலைச் செய்யுளாகிய வளமடல் உலாமடல்உலா அநுராக மாலை முதலாயினவும் பிரபந்தம் என்னும் பெயரால் பிற்காலத்தேவழங்கப்பட்டன. இப்பிரபந்தம் 96 வகைப்படும் என்ப. இவற்றின் இலக்கணம்கூறும் நூல் பாட்டியல் எனப்படும்பிரபந்தமானது சாதகத்தின் நிலையையும், திதி நிலை, வார நிலை,நாண்மீன் நிலை, யோக நிலை, கரண நிலை, ஓரை நிலை, கிரகநிலை ஆகியஇவ்வேழ்வகை உறுப்புக்களின் நிலையையும் சோதிட நூலால் நன்குணர்ந்துஅவற்றால் தலைவற்குறுவன கூறுவது என்னும் தொகையகராதி.