பாதிச்சம விருத்தம்

முதலடியும் மூன்றாமடியும் எழுத்துக் குறைந்தும் ஏனை இரண்டடியும்எழுத்து மிக்கும் நான்கடியும் சீர் ஒத்து வந்த அளவழிச் சந்தப்பாடல்.எ-டு : ‘மெய்யறி விலாமை யென்னும் வித்தினிற் பிறந்துவெய்யகையறு வினைகள் கைபோய்க் கடுந்துயர் விளைத்த போழ்தின்மையற வுழந்து வாடும் வாழுயிர்ப் பிறவி மாலைநெய்யற நிழற்றும் வேலோய் நினைத்தனை நினைக்க என்றான்’ (சூளா.198)இதன்கண், முதலடி மூன்றாமடி எழுத்து 16; இரண்டாமடி நான்காமடிஎழுத்து 17 என அமைந்துள்ளவாறு. (யா. வி. பக். 517)