பாக்களின் பண்புகளை எடுத்துரைக்கவல்லோர்

அறம் பொருள் இன்பம் வீடுபேறு ஆமாறு சொன்ன நூல் களுள்ளும், அவைசார்பாக வந்த சோதிடமும் சொகினமும், வக்கின கிரந்தமும், மந்திரவாதமும்,மருத்துவ நூலும், சாமுத் திரியமும், நிலத்து நூலும், ஆயுத நூலும்,பத்துவிச்சையும், ஆடைநூலும், அணிகலநூலும், அருங்கலநூலும் முதலாயவற்றுள்ளும் உள்ள மறைப்பொருள் உபதேசிக்க வல்லராய், கவிப்பெருமையோடு,சாவவும் கெடவும் பாடுமாறும் மனத்தது பாடுமாறும் பாடப்படுவோருக்குவரும் நன்மையும் தீமையும் அறியுமாறும் வல்லராய், உரைக்கவல்லசான்றோர்கள். அவ்வல்லோராவர். (யா. வி. பக். 491)