நேர்1 nērtal, 2.செ. கு. வி. (v.i.)
1. பொருந்துதல்; to be fit or appropriate.
“நேரத் தோன்று மெழுத்தின் சாரியை” (தொல். எழுத்து. 134);.
2. நிரம்புதல்; to be complete.
“நேரத் தோன்றும் பலரறி சொல்லே” (தொல். சொல். 7);.
3. இவ்வாறு செய்யவேண்டும் என்ற நோக்கமில்லாமல் நிகழ்தல்; to happen, occur, transpire.
இது காலத்தால் நேர்ந்தது. கோவில் திருவிழாவில் கலவரம் ஏற்படாமல் இருக்க வலுத்தகாவல் போடப்பட்டுள்ளது. அழைப்பிதழ் அச்சிடுவதில் ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டது.
4. எதிர்ப்படுதல்; to appear, come to view.
“பொழிலோவொன்று நேர்ந்ததுவே” (வெங்கைக்கோ. 321);.
5. இளைத்துப்போதல்; to grow thin, lean, to be emaciated.
உடம்பு நேர்ந்துபோய் விட்டது.
6. மென்மையாதல்; to be soft;
to yield to the touch.
“ஐந்து நேர்ந்தே” (காசிக. சிவ. அக். 18);.
குட. நேர் (to come to view.);.
[நுல்(பொருந்தல்); → நுள் → நிள் → நிர் → நெர் → நேர் → நேர்-தல்]
நேர்2 nērtal, 2.செ. குன்றாவி, (v.t.)
1. எதிர்தல்; to meet.
“வேந்தன்றனை நேர்ந்து காண்பானா’ (இரகு. தசரதன். 21);.
2. நெருங்குதல்; to approach, come near to.
“வெங்கரி…. வீரவாகுத் தலைவனை நேர்ந்து சொல்லும்” (கந்தபு. தருமகோப. 71);.
3. தீண்டுதல்; to seize, take hold of.
“குழலித்திங்கட் கோணேர்ந்தாங்கு” (பெரும்பாண். 384);.
4. பெறுதல்; to obtain.
“நிலையிலா நீர்மை யாக்க நேர்ந்துழி” (சேதுபு.திருநாட்.21);.
5. கொடுத்தல்; to grant, bestow.
“கரவாளை நேர்ந்தானிடம் போலும்” (தேவா. 111, 8);.
6. உடன்படுதல்; to agree, consent.
“அழும்பில் வேளுரைப்ப நிறையருந்தானை வேந்தனு நேர்ந்து” (சிலப். 25:178);.
“நெருப்பிலா விடத்துப்புகையிலை யெனனேர” (மணிமே29:102);
“மகிழ்வுனாங்கவை நேரா” (கூர்ம.அரியய.8);
7. ஒத்தல்; to resemble, equal.
“கைவலிளையர் நேர்கை நிரப்ப” (பதிற்றுப் 48:8);.
“நெல்லினேரே வெண்கலுப்பென” (அகநா 140:7);.
“கனியைநேர் துவர்வாயா ரென்னுங் காலாற் கலக்குண்டு” (திருவாச. 5: 27);.
8. உறுதிசெய்தல்; to resolve, vow, take vow.
“நற்றார்கலவே மென நேர்ந்தும்” (பு. வெ. 12. பெண்பாற். 7);.
9. அமர்த்துதல் (நியமித்தல்); (வின்);; to appoint, designate, appropriate, assign.
10. தண்டனைக்குட்படுத்துதல் (வின்.);; to consign, doom.
11. வேண்டுதல் (அக.நி.);; to entreat, pray.
12. சொல்லுதல்; to say, to speak.
“சீர்ச்சடகோபன் நேர்தலாயிரத்து” (திவ். திருவாய். 1.8:11);.
13. கடவுளிடம் வேண்டுதலுக்காக (பிரார்த்தனைக்காக); வைத்தல்; பொருத்தனை பண்ணுதல்; to appropriate, as an offering to God;
to consecrate, dedicate.
“தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்” (திவ். நாய்ச். 9:6);.
“செவிமறை நேர்மின்னு நுண்பொறி வெள்ளை” (கலித்.101:27);. பழனிக்குத் காவடி எடுக்க நேர்ந்து கொண்டான் (உ. வ.);.
14. எதிர்த்தல்; to oppose, resist, encounter, attack.
“அமர்கோள் நேரிகந்து ஆர்எயில் கடக்கும் பெரும்பல் யானைக்குட்டுவன்” (பதிற்றுப். 29:13, 14);.
“தானையை நேர்ந்து கொன்று’ (கம்பரா. மூலபல. 57);.
15. அறுத்தல்; to cut off. sever.
“ஓராதான் பொன்முடி யொன்பதோ டொன்றையும் நேரா” (திவ். பெரியாழ். 3.9:10);.
க. நேர்; ம. நேருக; கோத. நெர் (opposite);. நேர் (to come to view);; து. நெரியுநி, நெரெவுநி (to assemble);;தெ. நேர்சு (to learn);.
[நுல்(பொருந்தல்); → நுள் → நிள் → நிர் → நெர் → நேர் → நேர்-தல்]
நேர்3 nērttal, 4.செ. குன்றாவி. (v.t.)
1. ஒத்தல்; to resemble, equal.
“திண்ணறி வாளரை நேர்ப்பார் யார்” (நாலடி, 27);.
“கைவலிளையர் நேர்கை நிரப்ப” (பதிற்றுப். 48.8);.
“நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த” (சிலப். 7:8);.
“பொன்னே ரனையாய் புகுந்தது கேளாய்” (மணிமே. 2:16);
2. எதிர்த்தல்; to oppose, attack.
“நேர்த் தின்னா மற்றவர் செய்தக்கால்” (நாலடி. 67);.
[நேர்2 → நேர்3-. இது பிறவினை வடிவம்.]
நேர்4 nēr, பெ. (n.)
செய்ய, செய்யும்படி ஆகிய வடிவங்களின்பின் ஒருசெயல் நிகழ்ந்தது தற்செயலாக அல்லது சூழ்நிலையின் கரணியமாக என்பதை உணர்த்தும் துணை வினை; after the infinitive or future relative participle (padi); used to express the sense of ‘happen to’ ‘be forced to’.
அஞ்சல் வந்ததால் உடனே புறப்பட்டு வரநேர்ந்தது. வழியில் அவரைப் பார்க்கும்படி நேர்ந்தது.
[நேர்1 → நேர்4]
நேர்5 nēr, பெ. (n.)
1. வளைவு அல்லது விலகல் எதுவும் இல்லாதது, செவ்வை; straightness, directness.
நேர்வகிடு;நேராக நில். நேரா நோன்பு சீர் ஆகாது (பழ.);.
“முழங்குகட றந்த விளங்குகதிர் முத்தம் அரம்போழ்ந் தறுத்த கண்ணே ரிலங்குவளை” (மதுரைக். 315,316);.
“நேர்சீர் சுருக்கிக்காய கலப்பையிர்” (மலைபடு. 13);.
“ஒண்ணுதல் மகளிர் ஒங்கு கழிக்குற்ற கண்நேர் ஒப்பின்
கமழ்நறு நெய்தல்” (நற். 283);.
2. அறம் (நீதி);:
rightness, justness, impartiality.
அவன் நேர்பட நடவாதவன். நேர்படஒழுகு (பழ.);.
“புரையில் நுண்னேர் எல்வளை நெகிழ்த் தோன்குன்றத்து” (நற்.236);.
3. நல்லொழுக்கம்; morality, virtue, honesty.
4. திருந்திய தன்மை; refinement, nicety.
“நேரிழையாய்” (திருவாச. 7:2);.
5. மாறுபாடு (யாப். வி. 57:222);
opposition.
6. உடன்பாடு (திவா.);; agreement, consent, settlement.
7. நேர்விடை பார்க்க;see nér-vigal.
“சுட்டு மறைநேர்” (நன். 386);.
8. நிலைப்பாடு (யாப். வி. 58, உரை);; firmness,
9. முன்; front
10. உயிர் அல்லது உயிர் மெய் தனித்த நேரசை (தொல். பொருள். 315);; a metrical syllable consisting of a short or long letter, singly or followed by a consonant.
“குறிலே நெடிலே குறிவினை குறினெடில் ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரும் நிரையும் என்றிசின் பெயரே” (தொல். பொருள். செய், 3);.
“குறிலே நெடிலே குறவினை குறிலினையேனைக் குறினெடிலே நெறியே வரினு நிரைந்தொற் றடுப்பினும் நேர்நிரை யென்றறிவே” (யா. கா. 5);
ம. நேர்; க. நேர்; குட. நேரீ (truth fact);;து. நேரே.
[நேர்1 → நேர்6]
நேர்6 nēr, பெ. (n.)
1. நீளம்(சூடா.);; length, extension.
2. பொருந்திய வரிசை (வின்.);; row series, regularity.
3. பாதி (திவா.);; half, moiety.
4. நுண்மை; minuteness, smallness, fineness, slenderness,
“துடிகொ ணேரிடையாள்” (திருவாச. 29:5);.
5. செலவு (கதி); (வின்);; tendency, course, direction.
6. ஊர்த்துவநிலை; verticality.
“நேரவிரும் புண்டரர்க் கருள்வான்’ (அஷ்டப்.
திருவேங்கடத்தந், 6).
7. தனிமை (திவா.);; solitariness, solitude.
8. நிகர்; equal.
பாவேந்தர் தமிழை உயிருக்கு நேர் என்று கூறினார்.
“நெல்லி னேரே வெண்கலுப்பென” (அகநா. 140:7);.
”நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது தாரித் திருத்தல் தகுதி” (நாலடி, 72.);
“கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்” (குறள், 550);.
9. நேரடி; direct.
இஃது என் நேர் விருப்பம்.
ம, க. நேர்; தெ. நேரு;து. நேரெ.
[நேர்1 → நேர்6]
நேர்7 nēr, பெ. (n.)
1. கொடை (சூடா.);; gift.
2. மிகுதி (திவா.);; excess, excessiveness.
3. வலிமை; strength.
“நேர் மரப்பலகையும்” (சீவக. 2218);.
4. உவமை; comparison, similarity.
“தன்னே ரில்லோன்” (திருவாச. 3:30);.
“தன்னேரில்லாத சிவன்றனை” (சிவரகநந்திகேசுரநமனுக்கு.14);.
5. மென்மை; soft.
“பிணங்கு நேர் ஐம்பாலோர் பெண்கொண்டதுவே” (சிலப். 7:13);.
“நேரிமலர் நிறைகனை உறையுஞ்” (அகநா. 198:16);.
[நேர்1 → நேர்2]
நேர்6 nēr, பெ. (n.)
திருச்சுற்று; manner.
“இந்நேரிலே தந்தம் பிள்ளைகள் தாய்மார் பக்கலிலே அழுது சென்றால் தரிப்பார்களோ” (திவ். பெரியாழ். 2.2.3 வியா. பக். 253);
[நேர்1 → நேர்6]