நேர்வாளமரம் nērvāḷamaram, பெ. (n.)
நேர்வாளக் கொட்டை தரும் ஒரு சிறிய மரவகை; croton seed plant-Croton tiglium.
மறுவ. வாளம், நேபாளம்
[நேர்வாளம் + மரம்.]
இதன்கிளைகள் பக்கவாட்டில் பரவியதாகக் காணப்படும். இலைகள் மாறிமாறி அண்டவடிவாயும், கோணங்கள் வாய்ந்தும், வழவழப்பாயுமிருக்கும். இதன் கொழுந்து மொகமொசுப்பாயிருக்கும். இம்மரத்தின் பூவில் ஆண்யூ மேலாகவும் பெண்பூ கீழாகவும் இருக்கும். விதையின் வெளிப்பக்கம்.ஒடு அமைந்திருக்கும். இதன் பூக்கள் மஞ்சளாகவும் சிறியதாகவும் இருக்கும். மேழ (சித்திரை மாதம், ஆடவை வைகாசி); மாதங்களில் பூக்கும். இதன் விதை, இலை முதலியவை மருந்தாகப் பயன்படுகின்றன. இது நேபாளத்தில் இருந்து மிகுதியாக வருவதால் நேபாளம் – நேர்வாளம் எனப்பெயர் பெற்றது. சா.அக);.
இரட்டைவிதையிலைப் பயிர். இலையுதிராச் சிறுமரம். இது வங்காளம், அசாம், தென்னிந்தியா, மியான்மர்(பர்மா);, இலங்கை மலேயா தீவுகள் ஆகிய
[P]
இடங்களில் வளருகிறது. இதன் விதை ஆமணக்கு விதை போலிருக்கும். கொட்டைக்குள் இருக்கும் முளைசூழ் தசைச் செம்பழுப்பு நிறமானது. இதிலிருந்து எடுக்கும் எண்ணெய், மிகக் கொடிய கழிச்சல் மருந்து. இம்மருந்தை அதிகமாகக்கொடுத்தால் இறப்பு ஏற்படும். இந்த எண்ணெய் பழுப்பு அல்லது வெளுப்பான மஞ்சள் நிறமாக இருப்பதுடன் ஒருவகை நாற்றமுடனும் இருக்கும். பெரும்பாலும் இக்காலத்தில் இதனை மனிதர்களுக்குக் கழிச்சல் மருந்தாகப் பயன்படுத்துவதில்லை. கால் நடைகளுக்கே மிகுதியும் பயன் படுத்தப்படுகிறது.