நேரி

நேரி1 nēri, பெ. (n.)

   தமிழ்நாட்டிலுள்ளதும் சோழர்க்குரியதுமான ஒருமலை (பதிற்றுப்.40);; a hill in the Tamil country belonging to the Cholas.

     “நேரி வெற்பன்” (சூடா.2:16);

     [நேர் + இ. இ.சொல்லாக்க ஈறு

செங்குத்தாக நிற்கும் மலை.]

இம்மலையால் சோழனை நேரியன் என்று பழைய நூல்கள் கூறுகின்றன.

     “நீரிமிழ் சிலம்பின் நேரியோன் (பதிற்றுப்.40);.

     “பாடுசால் நெடுவரைக் கல்லுயர் நேரிப்பொருநன்’ (பதிற்றுப்.67);.

உறையூரின் தெற்கு வாயிலில் உள்ள ஒர் ஊரை நேரிவாயில் என்று சிலப்பதிகாரம் (28:117); கூறுகிறது.

இங்குச் சேரன் செங்குட்டுவன் தன் மைத்துனனான சோழனுக்குப் பரிந்து ஒன்பது மன்னரை வென்றான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

     “ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை நேரிவாயில் நிலைச்செரு வென்று” (சிலப்.28:16,117);.

 நேரி2 nēri, பெ. (n.)

   மக்களாட்சி முறையில் தங்களின் அரசைத் தாங்களே தேர்ந்தெடுக்க மக்களில் குறிப்பிட்ட அகவைக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை;மேற்குறிப்பிட்ட உரிமையைக் காட்டும் முத்திரைக் குத்தப்படும் சீட்டு,

 Vote(s);.

எங்கள் தொகுதியில் ஐம்பது விழுக்காடு நேரிகள் பதிவாகியது. தேர்தல் முடிந்து இரண்டுநாள்கள் கழித்து நேரிகள் எண்ணப்படும்.

     [நேர் + இ. (படைத்.பாவாணர்.);]