நேரிசையாசிரியப்பா

நேரிசையாசிரியப்பா nērisaiyāsiriyappā, பெ. (n.)

   ஈற்றயலடி முச்சீராய் வரும் ஆசிரியப்பா வகைகளில் ஒன்று; a kind of aşīriya-p-pā in which the penultimate line has three feet.

     “ஈற்றதன் அயலடி ஒருசீர் குறைய நிற்பது நேரிசை ஆசிரியம்மே.” (அவிநயம்);.

     [நேரிசை + ஆசிரியப்பா. ஆசிரியப்பா;

நான்குபாவகைகளில் ஒன்று. நான்கு பாவகைகள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா]

எ.டு:

     “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரற்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கு நாடனொடு நட்பே” (குறுந்.3);

     “வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்

மனையுறை மகளிர்க் காடவர் உயிரென

நமக்குரைத் தோருந் தாமே

அழாஅல் தோழி அழுங்குவர் செல்வே” (குறுந்:135);

     “நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்

என்றும் என்றோள் பிரிபறி யலரே

தாமரைத் தண்டா துதி மீமிசைச்

சாந்தின் தொடுத்த திந்தேன் போலப்

புரைய மன்ற புரையோர் கேண்மை

நீரின் றமையா வுலகம் போலத்

தம்மின் றமையா நந்நயந் தருளி

நறுநுதல் பசத்த லஞ்சிச்

சிறுமை உறுபவோ செய்யறி யலரே” (நற்.1);