நேமிநாதம்

நேமிநாதம் nēminātam, பெ. (n.)

   குணவீரபண்டிதர் இயற்றிய ஒரு தமிழ்நூல்; a treatise on Tamil grammar by Kuna-Virapaņḍidar.

     “தொல்காப்பியக் கடலிற் சொற்றி பச்சுற்றளக்கப் பல்காற் கொண்டோடும் பட வென்ப-பல்கோட்டுக் கோமி காமற்புலனை வெல்லுங்குணவீர நேமிநாதத்தினெறி” (நேமிநாதம்);

தமிழ் இலக்கணநூல்களில் ஒன்று. குணவீர பண்டிதர் என்னும் சமண ஆசிரியரால் நேமிநாதர் என்னும் தீர்த்தங்கரர் பெயரால் செய்யப்பெற்றது. இந்நூல் திரிபுவன தேவன் என்னும் குலோத்துங்கன் காலத்தில் செய்யப்பெற்ற தென இந்நூற் பாயிரவுரையால் அறியலாம்.

இந்நூல், தொல்காப்பியர் கூறிய எழுத்துக்கும் சொல்லுக்குமான இலக் கணத்தைச் சுருக்கிக் கூறுகிறது. இதன் முதல்நூல் தொலகாப்பியம். முதல்நூலை நோக்க இது மிகச்சிறுநூலாதலின் சின்னூல் என்றும் வழங்கப்பெறுகிறது. இது வெண்பாவால் ஆனநூல்.

நூல் அமைப்பு: முதலில் அருகக் கடவுளை வாழ்த்தி, அவையடக்கங் கூறிய இரண்டு செய்யுட்களாற் பாயிரம் அமைந்துள்ளது. எழுத்ததிகாரம் 24 செய்யுட்களாலும், சொல்லதிகாரம் 71 செய்யுட்களாலும் அமைந்துள்ளது. எழுத்ததி காரத்தில் இயல் வரையில்லை. சொல்லதிகாரம் தொல் காப்பியத்தைப் போலவே ஒன்பதியல்களைக் கொண் டுள்ளது. தொல்காப்பிய இயல்களின் பெயர்களே சிறிய மாற்றங்களுடன் அமைந்துள்ளன.

தொல்காப்பியம் படிக்கும் முன், சின்னூலாகிய இதனைப் படிக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்ததென்பது தெரிகிறது. இந்நூலுக்குப் பின்பே நன்னூல் தோன்றியது. பெயர் தெரியாத ஒருவரின் சிறந்த உரை ஒன்று இந்நூலுக்கு உள்ளது. இவ்வுரை

கருத்துரை, பொழிப்புரை, எடுத்துக்காட்டு, வினாவிடை, விளக்கம் ஆகியயாவுங் கொண்ட விருத்தியுரையாகக் கிடைக்கின்றது. இவ்வுரையில் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சீவகசிந்தாமணி, மணிமேகலை, பதினெண் கீழ்க்கணக்கு முதலிய நூல்களினின்றும் மேற்கோள்கள் வந்துள்ளன.

 நேமிநாதம் nēminātam, பெ.(n.)

   குணவீர பண்டிதர் இயற்றிய ஒரு தமிழிலக்கண நூல்; a treatise on Tamil grammar by {}.

     [நேமி + நாதம்.]