நேமிநாதன் nēminātaṉ, பெ. (n.)
அருகதேவன் (சூடா.);; Arhat.
சமணத் தலைவர்கள் (தீர்த்தங்கரர்); 24-ல் இருபத்திரண்டாமவராவர். இவரைத் துவாரகையை ஆண்ட கண்ணபிரானுக்குத் (தாயாதி மகனாரான); தமையன் முறையினர் என்பர், சமணர்கள். இவர் பெயரால் குணவீரபண்டிதர் நேமிநாதம்’ என்னும் தமிழிலக்கணநூல் செய்தார்.
இவருக்குத் தமிழ் நாட்டிற்பல இடங்களிற் கோயில்களிருந்தன. அவற்றுள் மயிலார்);ப் பூரில் இருந்த கோயில், கடலோரத்தில் இருந்ததனாற் கடலில் மூழ்கிவிடும் என்றெண்ணி அப்புறப்படுத்தப் பெற்றது. தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள மேல்சித்தாமூரில் சமணக் கோயில் இருக்கிறது என்று தென்னார்க்காடு மாவட்ட அரசிதழில் 367 ஆம்பக்கத்தில் குறிக்கப் பட்டுள்ளது. மயிலா(ர்);ப்பூரில் நேமிநாதருக்குக் கோயிலிருந்த தென்பதைத் திருநூற்றந்தாதி, நேமி நாதர் பதிகம் என்னும் இரண்டு நூல்களும், நேமி நாதப் பாயிரவுரையும் வலியுறுத்துகின்றன.
மயிலா(ர்);ப்பூரிற் கோயில் கொண்ட நேமிநாதருக்கு மயிலைநாத ரென்னும் பெயரும் உண்டு. இப்பெயரையே நன்னூலுக்கு உரையெழுதிய மயிலைநாதரும் கொண்டிருந்தார். திருநூற்றந்தாதி பாடிய அவிரோதியாழ்வாரென்பவர் மயிலை நேமிநாதர் மேல் திருவெம்பாவை ஒன்றும் எழுதியிருக்கிறார். இந்நூல் இப்போதும் மார்கழித்திங்களிற் படிக்கப் பெறுகிறது.
நேமிநாதன் nēminātaṉ, பெ.(n.)
அருகக் கடவுள் (சூடா.);; arhat.
[Skt. {} → த. நேமிநாதன்.]