நெற்று1 neṟṟudal, 5 செ.குன்றாவி, (v.t.)
1. மோதுதல்; to thrust, dash.
என்னைச் சுவரில் நெற்றினான்.
2. இலக்கில் தட்டுதல் (வின்.);; to strike a mark, as with balls.
3. இடறுதல்; to stumble.
தெ.நெட்டு, கோண்.நத்தாநா;குட.நேட்ட. (nētt);
[ஏற்று-தல் → நெற்று – தல், எற்றுதல் = மோதுதல், எறிதல், அடித்தல்]
நெற்று2 neṟṟudal, 5 செகுன்றாவி, (v.t.)
பெறுதல் (பாண்டி.);; to attain as an end.
நெற்று3 neṟṟudal, 5 செ.கு.வி. (v.i.)
முதிர்தல்; to mature, ripen.
[நெறி1-தல். → நெற்று-தல்.]
நெற்று4 neṟṟu, பெ. (n.)
1. தேங்காய் முதலியவற்றின் முதிர்ந்து காய்ந்த காய்; a dried, mature seed or nut.
“வாகை வெண்ணெற் றொலிக்கும்” (குறுந். 7);.
தேங்காய், நெற்றுகாயாகப் பார்த்து வாங்கிவா.
“நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்” (குறுந் 39);.
“அத்த வாகை அமலை வால் நெற்று” (குறுந் 369);.
“வாடல் உழிஞ்சில் விளை நெற்று அந்துனர் ஆடுகளப் பறையின் அரிப்பன வொலிப்ப” (அகநா.45);.
“சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து ஊழ்உறு விளைநெற்று உதிரக் காழியர் கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழியக் களரி பரந்த” (அகநா. 89);.
“ஒள்ளினர்ச் சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு விளை நெற்று அறை மிசைத் தாஅம் அத்தம் நீளிடை” (அகநா.115);.
“பெருநீர் மேவல் தண்ணடை எருமை இரு மருப்பு உறழும் நெடுமாண் நெற்றின் பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை” (புறநா. 297);.
“முற்றற் சிறு மந்தி முற்பட்ட தந்தையை நெற்றுக் கண்டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக் குற்றிப் பறிக்கும் மலைநாட.” (நாலடி. 237);.
2. நெறிப்பு (இலக். அக.);; stiffness.
3. உலர்ந்த பழம்; dry-fruit.
“நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற” (கந்தரல. 58);.
[நெறி → நெறு → நெறு1 – நெற்று.
1. மீண்டும் முளைப்பதற் குரிய அளவில் முற்றிய காய்.
2. வேர்க்கடலை போன்றதின்முதிர்வு.
3. தேங்காய்,
பீர்க்கு முதலியவற்றின் காய் முதிர்ச்சி.
4. உலர்ந்த பழம்]