நெட்டுயிர் மடக்கு

யாதானும் ஒரு நெட்டுயிரெழுத்தே மெய்யொடும் கலந்து பாடல் முழுதும்வருவது. வரும் எடுத்துக்காட்டுள் ஆகார நெட்டுயிரே பயின்றுள்ளவாறுகாண்க:எ-டு : தாயாயா ளாராயா டாமாறா தாராயாயாமாரா வானாடா மாதாமா – தாவாவாயாவாகா காலாறா காவாகா காணாநாமாலானா மாநாதா வா.‘தாய் ஆயாள் ஆராயாள் (ஆதலின்) தா (-வருத்தம்) மாறாது. அதனை நீஆராயாய். (அங்ஙனம் ஆராயாத நினக்கு) யாம் ஆரா? (-யாவர் ஆகுவோம்?) வான்நாடா! (-தேவருலகை ஒத்த நாட்டை யுடையோனே!) மாது (-இப்பெண்) மா தா ஆம்(-பெரிய வருத்தம் அடைவாள்); வா; வா (வந்தால்) யா ஆகா? (-உனக்குஎப்பொருள் வாய்க்காது?) கால் ஆறா கா (-கால் ஆறி அவசர மின்றி வந்துஎங்களைக் காப்பாயாக). ஆகா காண் (-இத்துன்பம் தாங்க ஒண்ணாது என்பதனைநோக்குவாயாக) நா நாம் (-பழி கூறும் அயலார் நா எங்களுக்கு அச்சம்தருகிறது). மால் ஆனா (-மயக்கம் நீங்காத) மா நாதா! (-பெரிய தலைவனே!) வா(-எம்மிடம் அன்பு கொண்டு வருவாயாக) – என்று பொருள்படும் இப்பாடற் கண்ஆகார நெட்டுயிர் மடக்கியவாறு.இது மடக்கு வகைகளுள் ஒன்று. (தண்டி. 97 உரை)