நெடுவாயில்

நெடுவாயில் என்ற இத்தலம், அப்பர், சம்பந்தர் இருவராலும் பாடலினுள் குறிக்கப் பெறுகின்றது. நெடுவாயில் (திருநா – 285-7)’ நிறைநீர் மருகன் நெடுவாயில் (திருஞா – 175-9) எனவே இது சிவன் கோயில் சிறப்பு பெற்ற இடம் என்பது தெளிவு. பெரிய வாயிலையுடைய குடியிருப்பு பகுதியாக இது அமைந்து இருக்கக் கூடும்.