நீலக்குடி

தென்னலக்குடி என்ற பெயரால் இன்று தஞ்சாவூர் மாவட் டத்தில் அமைகிறது இவ்வூர். அப்பர் நீலக்குடி இறையைப் பற்றிப் பாடும் நிலையில் இவ்வூர் பற்றி அறிய இயலுகிறது.
கல்லி னோடெனனப் பூட்டிய மண் கையர்
ஒல்லை நீர்புக நூக்கி வென் வாக்கினால்
நெல்லு நீள் வயனீலக் குடியரன்
நல்ல நாம நவிற்றி யுய்ந்தேனன்றே (186-7)
இந்நிலையில் நீலன் குடி என்பது சிவன் கோயில் கொண்ட ஊர் என்பது தெளிவு. எனவே இவ்வூர்ப் பெயரை நோக்கினால் நீலகண்டன் குடியெனச் சுட்டப்பட்டு, பின்னர் நீலன் குடி ஆகி, பின்னர் நீலக்குடியெனத் திரிந்ததோ எனத் தோன்றுகிறது பிற எந்த சான்றுமின்மையின், இதனைப்போன்ற பகமே அமைகிறது. இன்றைய தென்னலக்குடி என்ற பெயரும் நீலக்குடி, நலக்குடியாகி, பின்னர் திசை குறித்து தென்னலக் குடியென. நீலக்குடியின் திரிபாக அமைந்திருக்கலாம் என்னும் எண்ணம் தோன்றுகிறது.