ஆநின்று, கின்று, கிறு – ஆகிய மூன்றும் மூவிடத்தும் வரும்ஐம்பாற்கண்ணும் நிகழ்காலம் காட்டும் தெரிநிலை வினை முற்றுப் பகுபதஇடைநிலைகளாம்.எ-டு : நடவாநின்றான் (நட + ஆநின்று + ஆன்); நடக்கின் றான் (நட +க் + கின்று + ஆன்); நடக்கிறான் (நட + க் + கிறு + ஆன்) (நன். 143; இ.வி. எழுத். 48)உரையிற்கோடலால், உண்ணாநின்றிலன் – உண்கின்றிலன்அ – எனஎதிர்மறைக்கண் ஆநின்று கின்று என்னும் இடை நிலைகள் வேறுசில எழுத்தொடுகூடி நிகழ்காலம் காட்டும் எனவும்,உண்ணா கிட ந்தான் -உண்ணா விரு ந்தான் – எனக் கிடவும் இருவும், உரைக்கிற்றி – ‘ நன்றுமன் என்இது நாடாய்கூ றி ’ – என றகரமும்,‘ கானம் கடத் தி ர் எனக் கேட்பின் ’ (கலி. 7 : 3) எனத் தகரமும்,நோக்கு வே ற்கு, உண் பே ற்கு என முறையே வினை வினைப் பெயர்க்கண் வகரமும் பகரமும்சிறுபான்மை நிகழ்காலம் காட்டும் எனவும் கொள்க. (இ. வி. 48உரை)