நாட்டியத்தான் குடி

திருநாவுக்கரசர் தம் அடைவுத் திருத்தாண்டகம் பதிகத்தில் குறிப்பிடும் ஊராக அமைகிறது இது. நல்லக் குடி நனி நாட்டியத்தான் குடி (285-3) தனை நோக்க சிவன் கோயில் உளது என்பது உறுதி என்ற நிலையில் நாட்டியத்தான் சிவனைக் குறித்து அமைய, சிவன் குடி கொண்ட ஊர் என்ற நிலையில் இவ்வூர்ப்பெயர் அமைந்திருக்க வாய்ப்பு அமைகிறது.