சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர் நாங்கூர். எனவே தஞ்சாவூர் மாவட்டம் என்பது தெரிகிறது. வைணவத் தலங்கள் பலவற்றைக் கொண் வெள்ளக்குளம், திருவண்புருடோத்தமம். வைகுந்த விண்ணகரம், மணியாடக் கோயில், திருத்தெற்றயம் பலம், செம் பொன் செய்கோயில், அரிமேய விண்ணகரம். காவளம்பாடி, தேவனார் தொகை போன்றன அவை ; நாங்கூர் நாலாயிரம் என்ற வழக்கு, நாலாயிரம் வைணவக் குடிகள் வாழ்ந்த இடத் தைக் குறிக்கும் என்ற எண்ணம் அமைகிறது. ஆழ்வார்கள் பாடல், நாங்கூரின் இயற்கை அழகை மிகவும் சிறப்பிக்கின்றன. பல திருமால் கோயில்களைக் கொண்டு அமையும் இதன் தன்மை யை நோக்க, நான்கு ஊரில் வைணவர்கள் வாழ்ந்து பின்னர் அதுவே ஒரே ஊராக நாங்கூர் என்று சுட்டப்பட்டிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.