நந்திபுரவிண்ணகரம்

நாதன் கோயில் எனச் சுட்டப்படும் தலம் திருமங்கை யாழ்வார் பாடல் பெற்ற வைணவக் கோயில் இது.
நாதன் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணுமனமே என்பது இவர் பாடல் (1438) இதனை நோக்க, நகர் நந்திபுரம் என்ற கருத்து நந்திபுரம் பெயர் என்பதைக் காட்டுகிறது. விண்ணகரம் திருமால் கோயில் என்பதைச் சுட்டுகிறது. மட்டுமல்லாது நாதன் உறைகின்ற வர் சுட்டும் நிலையில் கோயில் இறைவன் நாதன் எனப் பெருமை பெற்ற நிலையில் கோயில் நாதன் கோயில் எனச் சுட்டப்பட்டு இருக்கலாம். பின்னர் கோயில் பெயரே ஊர்ப் பெயராக அமைந்து இருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. நந்தி புரம் என்ற பெயர் சிவன் கோயிலும் இவ்வூரில் இருந்ததன் காரண மாக இப்பெயரைப் பெற்றிருக்கக் கூடும் என்ற எண்ணத்தைத் தருகிறது.