தொல்காப்பியம் கூறும் பிரபந்தவகை

துயிலெடை நிலை, கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை,பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை, பெருமங்கலம், மண்ணுமங்கலம்,குடைநிழல் மரபு, வாள்மங்கலம், எயில் அழித்த மண்ணு மங்கலம்,கடைக்கூட்டு நிலை, இருவகை விடை, காலம் கண்ணிய ஓம்படை, ஞாலத்து வரூஉம்நடக்கையது குறிப்பு – எனத்தொல்காப்பியனார் அகலக் கவியை விதந்துகூறுவனவாக வரும் இவையெல்லாம் (தொ. பொ. 91 நச்.) அவர் கூறும் பிரபந்தவகைகளாம்.இனி, ‘அகன்று பொருள் கிடப்பினும்’ எனவும், ‘மாட்டும் எச்சமும்’எனவும் (தொ. பொ. 522, 523 பேரா.) அவர் செய்யு ளியலுள் கூறுவனவற்றால்,முறையே பொருள் தொடர் நிலைச் செய்யுளும் சொல் தொடர்நிலைச் செய்யுளும்பெறப்படும் என்பது.இவ்வாற்றான் பல அடியால் நடக்கும் தனிநிலைப் பாட்டு எனவும்,தொடர்நிலைப் பாட்டு எனவும் சொல்லப்பட்ட அகலக்கவி யாகிய பிரபந்தங்களின்வகை சிலவற்றைத் தொல்காப்பியம் கூறிற்று என்பது. (இ.வி.பாட். 7உரை).