பிள்ளைத்தமிழ், கலம்பகம், பன்மணிமாலை, மும்மணிக் கோவை, அகப்பொருட்கோவை, தொகைச்செய்யுள், இணைமணிமாலை, இரட்டை மணிமாலை, மும்மணி மாலை,நான்மணிமாலை, இருபா இருபஃது, ஒருபா ஒருபஃது, ஒலி அந்தாதி, இன்னிசை,வருக்கமாலை, கைக்கிiள, மங்கல வள்ளை (வேறுவகை), இரட்டைமணிமாலை, நேரிசை,மெய்க்கீர்த்தி மாலை, காப்புமாலை, வேனில்மாலை, பல்சந்த மாலை,அங்கமாலை, வசந்தமாலை, நவமணிமாலை, பரணி, தசாங்கப்பத்து, பதிற்றந்தாதி,நூற்றந்தாதி, அட்டமங்கலம், அலங்காரப் பஞ்சகம், ஊசல், சின்னப்பூ,சதகம், எண் செய்யுள், ஐந்திணைச் செய்யுள், நாழிகை வெண்பா, நானாற் பது,முலைப்பத்து, நயனப்பத்து, வில் வாள் வேல் கோல் வேழம் குதிரை நாடு ஊர்கொடை என்னுமிவ் ஒன்பதனையும் தனித்தனியே பப்பத்தாகக் கூறும் ஒன்பது வகைவிருத்த மாகிய வில் விருத்தம் முதலியன, பெருங்காப்பியமும் காப்பியமும்எனப்பட்ட இருவகைக் காப்பியம் எனச் சொல் லப்பட்ட ஐம்பத்தைந்தும் தொகைபெற வகுத்த அகலக்கவி வேறுபாடும், அவை போல்வன பிறவும் தொடர்நிலைச்செய்யுளாம். (பல அடிகளான் அமைந்த பொருள் தொடர் புடைய வளமடல், உலாமடல்,உலா முதலியன தனிநிலைச் செய்யுளாம்.) (இ.வி.பாட். 45) சதுரகராதியும்பிரபந்த மரபியலும் தொடர்நிலை தனிநிலைச் செய்யுள் வகைகளைப் பிரபந்தமென96 ஆகக் கூறும். தொடை அகராதி – வீரமா முனிவரின் சதுரகராதியின் தொடைபற்றிய பகுதி.