தேவர்கதியும் மக்கட்கதியும்

றகர ஒற்று அல்லாத ஏனைய வல்லொற்று ஐந்தும், ஒ என்னும் குற்றுயிர்அல்லாத ஏனை நாற்குற்றுயிரும் தேவகதியின் கூறாம். ஆ, ஈ, ஊ, ஏ என்னும்நான்கெழுத்தும், னகர ஒற்றல் லாத ஏனைய ஐந்து மெல்லொற்றும் மக்கள்கதிக்குரிய எழுத்துக்களாம். இவ்விரு கதியும் முதல் மொழிக்குப்பொருந்தும். (மெய் ஈண்டு உயிர்மெய்யையே குறிக்கும்.) (இ.வி. 798)