தெள்ளாறு

ஆற்றுப் பெயரால் பெயர் பெற்ற ஊர்ப்பெயர் கோயிற் சிறப்புமுடையது என்பது திருநாவுக்கரசரின் அடைவுத் திருத் தாண்டகப் பதிகம் மூலம் தெரிகிறது. தெள்ளாறும் வளைகுளமும் தளிக் குளமும், நல் இடைக்குளமும் (285-10) என இதனைச் சுட்டுகின்றார் இவர்.