தூது

கலிவெண்பாவினாலே, பாணன் முதலாகப் பாங்கன் ஈறாக விடுக்கும் உயர்திணைஇருபாலினையும், கேளா மரபின வற்றைக் கேட்பனவாகக் கூறிவிடுக்கும் அன்னம்கிளி வண்டு மயில் குயில் முதலிய அஃறிணைப் பொருள்களையும் இளைய கலாம்முதிய கலாம் இவற்றின் துனி நீக்குதற்கு வாயிலாக விடுத்தல் தூதுஎன்னும் பிரபந்தத்தின் இலக்கண மாம். (இ. வி. பாட். 114)